Skip to main content

ரஜினியின் கூலி படத்தில் இணையும் கன்னட மாஸ் ஹீரோ!

ரஜினிகாந்த் நடிப்பில் அவரது 171ஆவது படமாக கூலி உருவாகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜிக்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் பிற மொழி முன்னணி திரை கலைஞர்கள் வில்லன், கேமியோ கதாபாத்திரங்களில் நடித்தால் மட்டுமே போட்ட முதலை எடுக்க வணிக ரீதியான வசூல் கிடைக்கும் என்ற சூழல் தமிழ் சினிமாவில் உள்ளது.

அந்த அடிப்படையில் கூலி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க தெலுங்கு திரை நட்சத்திரம் நாகர்ஜுனாவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் மறுத்து விட்டதால், தற்போது கூலி படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய இளம் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமில்லாதவர் உபேந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.

1995ல் கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஓம் படத்தின் மூலம் அகில இந்திய அளவில் பிரபலமானவர் உபேந்திரா. கன்னட சினிமாவை சர்வதேச தளத்திற்கு கொண்டு சென்றதில் அப்படத்தை இயக்கி நடித்த உபேந்திராவுக்கு பெரும் பங்கு உண்டு.

அன்றைய காலகட்டத்தில் இந்த படத்தில் நடிக்க, சிறையில் இருந்த நிழல் உலக தாதாக்களையும், நிஜ ரவுடி, கொலைகாரர்களையும், ஜாமினில் எடுத்து இந்த படத்தில் நடிக்க வைத்து படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார் உபேந்திரா.

இன்று வரை இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் பட்ட படங்களில் அதிக பார்வைகளை பெற்ற படம் ஓம், அது மட்டுமல்ல கடந்த 25 ஆண்டுகளில் 500க்கும் அதிகமான முறை மறு வெளியீடு செய்யப்பட்ட கன்னட படமாக ஓம் உள்ளது.

இந்த படத்தின் கதை ஒரு நிழல் உலக தாதாவின் உண்மையான வாழ்க்கை தான் என தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் சமீபத்தில் கூறியிருக்கிறார் உபேந்திரா.

கன்னட சினிமாவின் போக்கை 25 வருடங்களுக்கு முன்பே மாற்றிய இயக்குனர் உபேந்திரா, தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் இணைந்திருப்பது அகில இந்திய அளவில் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதுடன், வணிக மதிப்பு அதிகரிக்கவும் காரணமாக அமையும் என கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இராமானுஜம்

72வது பிறந்தநாள் : விஜயகாந்த் சிலையை கண்கலங்க திறந்து வைத்தார் பிரேமலதா

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...